தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ndpfront 94 நாள் முன்பு (http://www.ndpfront.com) அரசியல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இந்த விலை அதிகரிப்புக்கு முன்னமே, உலக வங்கியின் கட்டளைக்கு அமைய இலங்கை நாணயத்தை பண இறக்கம் செய்தனர். அதாவது இலங்கையில் “சுதந்திர” தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னம், இலங்கை நாணயத்தை 20 சதவீதத்தால் பணவிறக்கம் செய்தனர். இந்தப் பணவீக்கம் இறக்குமதி பொருளின் விலையை, 20 சதவீதத்தால் திடீரென அதிகரிக்க வைத்துள்ளது. அதேநேரம் உற்பத்திக்கான செலவில் அதிகரிப்பு இதற்கு இருப்பதில்லை என்பதால், உள்ளுர் சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக, இது மாறுகின்றது. பணவீக்கத்தின் மற்றொரு விளைவு, சர்வதேச நாணயத்தில் உள்ள கடன் மற்றும் வட்டிக் கொடுப்பனவு பணவீக்கத்துக்கு அமைய 20 சதவீதத்தால் திடீரென அதிகரிக்கின்றது. பணத்தை கடனாக வாங்காமல், அதன் தொகை 20 சதவீதத்தால் அதிகரிக்கின்றது. இதற்கான வட்டி உட்பட அனைத்தையும், மக்களிடம் புடுங்கிக் கொடுக்கும் அளவு 20 சதவீதத்தால் அதிகரிக்கும்;. இப்படி நாட்டை உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப திவலாக்கி விற்கின்ற அரசு, மக்களை ஒடுக்க இராணுவத்தை பலப்படுத்துகின்றது.