தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kishore 86 நாள் முன்பு (http://www.savukku.net) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சென்னையில் அடுத்தடுத்து நடந்த இரண்டு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஐந்து நபர்களை சென்னை மாநகரக் காவல்துறையினர், சென்னை வேளச்சேரியில் எஸ்.என்.முதலித் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கொலை செய்தனர். இந்த என்கவுண்டர் சம்பவத்தை விவரிக்கும் காவல்துறையினர், ஐந்து நபர்களை விசாரிப்பதற்காக சென்ற காவல்துறையினரை நோக்கி அந்த ஐந்து நபர்களும் சராமாரியாகச் சுட்டதால், தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர்கள் அனைவரும் இறந்து போனார்கள் என்ற தகவலை வெளியிட்டது.