தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kudimakan 162 நாள் முன்பு (http://kudimakan.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
காட்டுபூச்சி தன் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனது தங்கை சாந்தியும் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அது ஒரு மாலைநேரம், பள்ளியில் மணி அடித்தவுடன் வழக்கம்போல மாணவர்கள் ஹே!! என சத்தமிட்டுகொண்டு பள்ளியை விட்டு ஓடினர். காட்டுபூச்சியின் வீடு பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, குடும்பத் தொழில் விவசாயம் என்பதால் தங்களுடைய நிலத்திலே வீடுகட்டி வாழ்ந்துவந்தது அவனது குடும்பம். காட்டுபூச்சி தன் தங்கைக்காக பள்ளி வாயிலில் காத்திருந்தான். தங்கையை பள்ளிக்கு அழைத்து போவது, மீண்டும் வீட்டிற்கு அழைத்து போவது அவனது கடமைகளுள் ஒன்று. சாந்தி வந்தாள், இருவரும் வீட்டைநோக்கி நடையைகட்டினர்.