தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



rammaniam 658 நாள் முன்பு (http://kaattchi.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
மஹாராஷ்டிராவிலிருந்து வந்த மறுநாள் இளங்கலை வகுப்பிலாவது சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுப்பார்க்கலாம் என்று சிவகாசி கல்லூரிக்கு அம்மாதான் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போனாள். மாணவிகள் சேர்க்கை நடந்து கொண்டிருந்த அறைக்கு வெளியே சாந்தி நின்றுவிட்டாள். அம்மாதான் உள்ளே போய் சேர்க்கைக்கு வந்த மாணவிகளைப் பார்த்து, விவரம் கேட்டறிந்து அட்மிசன் போடுகிறவர்களிடம் போய் நின்று கொண்டாள்.
“கிராமத்திலிருந்து வர்றோம். எங்கக் குடும்பத்துல காலேஜ் வரைக்கும் யாரும் படிச்சதில்ல. இவள எப்படியாவது படிக்க வைக்கணும்னு ஒரு ஆசை. இவளும் நல்லா படிப்பாங்க. தயவு செஞ்சி இவளைச் சேர்த்துக்கணும்”