தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eelampakkam 102 நாள் முன்பு (http://eelampakkam.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இலங்கைத் திருநாட்டின் அறுபத்து நான்காவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றனர். அடக்கப்படுபவர்களோ ஆட்சியாளர்களிடம் இருந்து உரிமை பெறுவதை தமது சுதந்திரமாக நினைக்கின்றனர். இங்குதான் ‘சுதந்திரம்’ என்பது வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. இந்த வகையில் இலங்கையின் சுதந்திரத்தை எடுத்து நோக்கினால் கடந்த 64 ஆண்டுகளாக சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் சுதந்திரத்தின் பொருளைப் புரிந்து...